Wednesday, December 25, 2013

எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு 
அன்பே... 
நான் நிழலில்லாதவன் தெரியாதா 
என் நிழலும் நீயெனப் புரியாதா 
உடல் நிழலைச் சேரவே முடியாதா 
அன்பே... அன்பே... 

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே 
வா வா... 
என் வாசல்தான்... 
வந்தால்... 
வாழ்வேனே நான் 

எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு 
அன்பே... 

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும் 
அன்பே உன் பேரைச் சொல்லித் தான் 
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும் 
கண்ணே நம் கண்கள் சந்தித்தால் 

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான் 
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான் 
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான் 

எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு 
அன்பே... 
நான் நிழலில்லாதவன் தெரியாதா 
என் நிழலும் நீயெனப் புரியாதா 
உடல் நிழலைச் சேரவே முடியாதா 
அன்பே... அன்பே... 

நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருசங்களாகும் 
நீ என்னை நீங்கிச் சென்றாலே 
வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிசங்களாகும் 
நீ எந்தன் பக்கம் நின்றாலே 
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் 
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் 
நிஜம் உந்தன் காதலென்றால் 

எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு 
அன்பே... 
நான் நிழலில்லாதவன் தெரியாதா 
என் நிழலும் நீயெனப் புரியாதா 
உடல் நிழலைச் சேரவே முடியாதா 
அன்பே... 

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே 
வா வா... 
என் வாசல்தான்... 
வந்தால்... 
வாழ்வேனே நான் 

எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு 
அன்பே...

0 comments:

Post a Comment